பாக்யராஜை கன்னத்தில் அடித்த நபர்! உண்மையை மேடையிலேயே உளறிய பிரபல நடிகர்!!
director bakkiyaraj says about his past
இயக்குனர் பாக்யராஜ் 'சுவரில்லாத சித்திரங்கள்' என்னும் படத்தை முதலில் இயக்கினார். முன்னதாக அவர் கதாநாயகனாக அறிமுகமான படம் 'புதிய வரப்புகள்'. பின்னர் இவர் பல மொழிகளில் இயக்குனராக முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் பேசிய அவர் "சிறுவயதில் பெண்ணொருவருக்கு காதல் கடிதம் கொடுப்பதற்காக சென்றேன். அப்போது பெண்ணின் அண்ணன் அங்கு வந்து விட, நான் அங்கிருந்து ஓடி விட்டேன். பின்னர் அந்தப் பெண்ணின் அண்ணன் என் அண்ணனை சந்திப்பதற்காகஎங்க வீட்டிற்கு வந்துள்ளான்.
அப்போது, நான் என்னை பற்றி கூறவே வந்திருக்கிறான் என்று பயத்தில் இருந்தேன். ஆனால் அவர் அந்த காதல் கடிதம் குறித்து எதுவும் பேசுவதில்லை. மேலும் என் அண்ணன் என்னை சில பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு போக சொன்னார். நானும் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அந்தப் பெண்ணின் அண்ணன் வீட்டில் இல்லை.
ஆனால் என் அண்ணன் மிகவும் கோபத்துடன் என்னை பார்த்தார். நான் அவரது தங்கைக்கு காதல் கடிதம் கொடுத்தது குறித்து கூறி விட்டார் போலும் என்று நினைத்தேன். ஆனால் அவர் அதை கூறவில்லை. என் அண்ணன் வேகமாக என்னை ஓங்கி கன்னத்தில் அறைந்தார்.
பின்னர், என்ன நீ அந்த விலைமாது இருக்கும் பக்கம் சென்றாயாமே? இனிமேல் அந்தப் பக்கம் போனால் அவ்வளவுதான் என்று கடுமையாக திட்டினார். அப்போதுதான் புரிந்தது அவர் வேற மாதிரி என்னை போட்டுக் கொடுத்துள்ளார் என்றும் இனிமேல் அவர் தங்கை இருக்கும் பக்கமே போகக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்" இவ்வாறு அவர் மேடையிலேயே வெளிப்படையாக கூறியிருந்தார்.
English Summary
director bakkiyaraj says about his past