தனுஷின் திருச்சிற்றம்பலம்.. கொண்டாடும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்கவுள்ள 44 வது படத்திற்கு திருச்சிற்றம்பலம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவரது இயக்கத்தில் ஏற்கனவே தனுஷ் குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நான்காவது முறையாக இவர்களது கூட்டணி இணைந்துள்ளது.

இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக முதலில் படக்குழு அறிவித்தது. அதன்பின் இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா மற்றும் நித்யா மேனன் ஆகிய மூன்று நடிகைகள் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது தனுஷின் 44 வது படத்திற்கு திருச்சிற்றம்பலம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை இந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில்தான் தனுஷின் 43வது திரைப்படத்தின் டைட்டில் மாறன் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhanush 44th movie as thiruchitrambalam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->