சூப்பர் ஸ்டாரை சந்தித்த அல்டிமேட் இயக்குனர்.! அடடே இது தான் விஷயமா.?!  - Seithipunal
Seithipunal


அறிமுக இயக்குனரான தேசிங்கு பெரியசாமி இயக்கியுள்ள திரைப்படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இது தான் அவருடைய முதல் படம் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். 

அந்த அளவிற்கு திறமையை வெளிப்படுத்தி இருந்தார் தேசிங்கு பெரியசாமி. இந்த படத்தில் கதாநாயகனாக துல்கர் சல்மான் மற்றும் நடித்து இருப்பார். அவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரிது வர்மா, நிரஞ்சனி ஆகியோர் நடித்து இருப்பார். 

கடந்த வருடத்தில் வெளியான இந்த திரைப்படம் நிறைய பாராட்டுக்களைப் பெற்றது. இந்த திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கூட பாராட்டிய ஆடியோ இணையத்தில் வைரல் ஆகியது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் கூட தனக்கும் ஒரு கதையை தயார் செய்யும்படி கேட்டு இருந்தார். 

இத்தகைய சூழலில் இயக்குனர் பெரியசாமி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவருடைய போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். ஒருவேளை கதை சொல்லியிருக்கிறாரோ என்று சந்தேகமாக தகவல்கள் வெளியாகியது. 

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி மற்றும் நிரஞ்சனி இரண்டு பேருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே, தங்களது திருமண பத்திரிகையை வைக்கத்தான் சூப்பர்ஸ்டாரை அவர் சந்தித்துள்ளார் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

desingu periyasamy meets rajini


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->