நடிகர் சங்க தேர்தலில் புதிய திருப்பம்! நீதிமன்றம் வித்தியாசமான உத்தரவு! அதிர்ச்சியில் நடிகர்கள்!  - Seithipunal
Seithipunal


தொடர்ந்து பல்வேறு தடைகளால் நிறுத்தப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை, திட்டமிட்டபடி வருகின்ற 23-ஆம் தேதி நடத்தலாம் என்று, நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நடிகர் சங்க தேர்தலை வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்கத்தில் குளறுபடி இருப்பதால், தேர்தலை நிறுத்தி வைப்பதாக சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவினை எதிர்த்து தற்போதைய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் சங்க தேர்தலை திட்டமிடப்பட்ட 23-ஆம் தேதி நடத்தவும், தேர்தலை நிறுத்தி வைத்த பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டார். 

திட்டமிட்டபடி தேர்தலை நடத்தலாம், ஆனால் வாக்குகளை எண்ணக் கூடாது எனவும், நீதிபதி மறு உத்தரவு வரும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். விசாரணை முடியும் வரை வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cinima Actors election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->