சினிமாவிற்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய வில்லன்., அடுத்து நடந்த துயர சம்பவம்.!
cinema actor died
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த ஆர்.எஸ். கோபால் இவர் தூத்துக்குடி நகர ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக பொறுப்பு வகித்தவர்.
இவர் ஏற்கனவே வலியுடன் காதல் என்ற படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். பூதமங்கலம் போஸ்ட் என்ற புதிய படத்தில் வட்டம் வரதன் என்கிற வில்லன் வேடத்தில் நடித்து வந்தார், இந்தநிலையில் அந்த படத்தில் இறந்து போவது போன்ற காட்சி ஒன்றில் நடித்தார்.
படத்தில் சவபெட்டியில் மாலையுடன் இருப்பது போன்ற தன்னுடைய வீடியோவையும் , படத்திற்காக ஒட்டப்பட்ட தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரையும் தனது நபர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு தெரிந்த பலர் ஆர்.எஸ்.கோபால் மரணம் அடைந்ததாக கருதி வீட்டிற்கு இறுதி அஞ்சலி செலுத்த மாலையுடன் வந்துள்ளனர். அங்கு வாசலில் கெத்தாக அமர்ந்திருந்த கோபால், தன்னுடைய புதிய படத்தின் காட்சிக்காக எடுக்கப்பட்ட படம் என்று நண்பர்களிடம் விளக்கம் அளித்த அவர் ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களையும் கிழித்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் ஆர்.எஸ்.கோபால் மரணமடைந்ததாக காயல்பட்டினம் பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதனையும் சினிமாவிற்காக ஒட்டியிருக்கலாம் என்று அப்பகுதியினர் கருதியுள்ளனர். ஆனால் ஆர்.எஸ்.கோபால் உண்மையாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தாமதமாகவே அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. அதன்பின்னர் தான் நண்பர்கள், உறவினர் அவரது அஞ்சலி செலுத்த சென்றுள்ளனர்.
சினிமாவிற்காக அச்சடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி சினிமாவில் பிரபலமாக நினைத்த ஆர்.எஸ்.கோபால் அடுத்த சில நாட்களிலேயே நிஜத்தில் இறந்து போனது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.