வித்தியாசமான வேடத்தில் கலக்கும் சேரன்.! - Seithipunal
Seithipunal


ராஜாவுக்கு செக் என்னும் படத்தில் நடித்துள்ள சேரன் வித்தியாசமான வேடத்தில் நடித்திருப்பதாக, படத்தின் இயக்குனர் சாய் ராஜ்குமார் தெரிவித்திருக்கிறார்.

இந்த படத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் ஆகியோர் நடித்துள்ள படம் ராஜாவுக்கு செக். மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில், சேரன் சி.பி.சி.ஐ.டி அதிகாரியாக இருக்கிறார். அவர் மகளுக்கு ஒரு பிரச்சினை. அந்த பிரச்னையிலிருந்து அவர் மகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.

இதன் இன்னொரு பகுதி அந்த பிரச்னை பற்றி ஒவ்வொரு பெண் குழந்தையை பெற்ற பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது. ஒரு பெண் குழந்தை பாதுகாப்பில் தகப்பனின் பங்கு என்ன என்பது மற்றொரு பகுதி. இவை தவிர மூன்றாவது பகுதி ஒன்று உள்ளது. அது சேரனின் கேரக்டர். சேரன் ‘க்ளைன் லிவின் சிண்ட்ரோ’ என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். அவர் தீடீரென எந்த நேரத்திலும் தூங்கிவிடுவார். 

இந்த தூக்கம் பல மணி நேரம், பல நாள், பல வாரங்கள் கூட நீடிக்கும். இந்த பிரச்னை உலகில் ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்குத் தான் இருக்கிறது. ஒரு பெண் 8 மாதங்கள் தொடர்ந்து தூங்கியது உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குறைபாடுள்ள கேரக்டர் உலகில் எந்த சினிமாவிலும் வந்ததில்லை. முதன் முதலாக தமிழ் படத்தில் கொண்டு வந்திருக்கிறோம். என்று சாய் ராஜ்குமார் தெரிவித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cheran in new getup


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->