கவினை புகழும் சேரன்..! இது தான் காரணமா.? - Seithipunal
Seithipunal


100 நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தற்போது 60 நாட்களை எட்டியுள்ளது. இந்த நாளுக்கான ப்ரோமோ விடியோவை விஜய் தொலைக்காட்சி வெளிட்டுள்ளது. அதில் சேரன் கவினை புகழ்ந்து பேசுவது போல் வந்துள்ளது.

இரண்டாவது வார இறுதியில் முதலாவது நபராக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, ரேஷ்மா, சரவணன், ஷாக்சி அகர்வால், மதுமிதா மற்றும் அபிராமி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

சென்ற வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வனிதா மீண்டும் உள்ளே வந்துள்ளார். அவர் வந்த பின்பு நிறைய சண்டைகள் வந்ததை பார்த்திருப்போம். இதுவே நிகழ்ச்சியை பரபரப்பாக செல்ல காரணமாக இருந்தது.

இந்நிலையில் 60-வது நாளுக்கான இன்றைய முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில் கவினை புகழ்ந்து சேரனும் லாஸ்லியாவும் பேசுவது போன்று உள்ளது.

சேரன் கவினிடம் பேசுகையில் “நீ நண்பர்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் ரொம்ப நல்ல விஷயம், உன்னிடம் தெரியாம சில தவறுகள் வருகிறது. அதனால், நீ கெட்டவன் கிடையாது நல்லவன்” என்றும் அவர் பாராட்டி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cheran about kavin today promo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->