பிரபல நடிகையின் காதலன் மீது பாலியல் புகார்.! நீதிமன்றத்தில் பரபரக்கும் வழக்கு.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த 24 வயதான ராதிகா எனும் இளம்பெண் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வருகின்ற பிப்ரவரி மாதத்தில், ராதிகாவுக்கு, ராஜேஷ் என்ற இளைஞருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருந்தது. 

இத்தகைய சூழலில், ராஜேஷ் தான் பணிபுரிகின்ற ஓட்டலுக்கு ராதிகாவை அழைத்துள்ளார். அங்கு ராதிகாவுடன் அவர் உல்லாசமாக இருந்துள்ளார். அதன் பின்னர், ராஜேஷ் தான் திருமணம் செய்யவுள்ள பெண் என்றும் பாராமல் ராதிகாவிடம் ரூ.10 லட்சம் கொடுத்தால் தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என கூறி இல்லையென்றால் போட்டோவை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக ராதிகா அதிர்ச்சி அடைந்து ரூ.2.5 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து அவரிடம் கொடுக்க, கேட்ட பணத்தை கொடுக்கவில்லையெனில் முகத்தில் ஆசிட் அடித்து விடுவேன் என மிரட்ட அந்த பெண் உடனே ஜே.ஜே நகர் காவல் நிலையத்தில் புகார் ராஜேஷ் குறித்து புகார் அளித்துள்ளார்.

இதற்கு காவல்துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே, இதுகுறித்து ராதிகா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜேஷை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai serial actress highcourt case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->