வைகைப்புயல் மீது வழக்கு பதிவு..! வடிவேலுவை தேடும் காவல்துறை..!
case filed for vadivelu for money forgery
நடிகர் வடிவேலுவின் தம்பி மணிகண்டன் மற்றும் இரண்டு பேர் தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரை கே புதூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்தவர் வைப்புயல் வடிவேலு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வருகிறார். இதற்கிடையில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் அவர் நடித்து வந்த 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதில் அந்த படத்தை தயாரிப்பாளர் இயக்குநர் ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது போல பல்வேறு பிரச்சனைகளில் வடிவேலு இருந்து வருகிறார்.
இந்த நிலையில், வடிவேலு எலி திரைப்படத்தில் நடித்த போது, அந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் குமாருக்கு, தனது நண்பர் ராம்குமாரிடமிருந்து ஒன்றரைக்கோடி ரூபாய் வாங்கிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி தராததால் வடிவேலு கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரை கே புதூர் காவல்நிலையத்தில் சதீஷ் குமார் புகார் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சதீஷ் குமாரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடிகர் வடிவேலுவை தேடி வருவதாக கூறப்படுகிறது.
English Summary
case filed for vadivelu for money forgery