போட்டியாளர்களை கதறவிடும், பிக்பாஸ்.! கையில் எடுத்த ஆயுதம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் 4ஆம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 தற்போது 85 நாட்களை கடந்து வெற்றிகரமாக செல்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பகாலத்தில் மிகவும் சுவாரஸ்யம் இன்றி சென்றது. ஆனால், தற்போது இறுதி கட்டத்தை எட்டும் நிலையில், மிக விறுவிறுப்பாக செல்கிறது. 

எதிர்பாராத விஷயங்கள் பலவும் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது. வைல்ட் கார்டு வழியாக உள்ளே நுழைந்த அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் குரூப்பிஸத்தை தோற்றுவித்ததன் காரணமாக ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

நச நசவென்று வீட்டிற்குள் பேசிய நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை குறைத்த அனிதாவும் சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். மீண்டும் அடுத்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் செய்யப்பட்டது. இந்த நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களை அழவைக்கும் முயற்சியில் பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளது. 

ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஃப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் பிக்பாஸ்  வீட்டிற்குள் வருகை புரியும் பொழுது, அசையாமல் இருக்க வேண்டும் என்பது தான் இந்த டாஸ்க். இன்று முதல் இந்த டாஸ்க் துவங்க உள்ளதாம். இதில், சென்டிமென்ட் அதிகம் இருக்கும் என்பதால் ஹவுஸ்மேட்சும், ஆடியன்ஸும் அழுவதற்கு தயாராகுங்கள் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biggboss freeze task starts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->