ஷெரினுக்கு ஏற்பட்ட சோகம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
bigg boss sherin says life story
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க 105 நாட்களுடன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் கடைசியாக முகேன், சாண்டி, லொஸ்லியா, ஷெரின் ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வானார்.
அதில் முகேன் முதல் இடத்தை பிடித்து, 50 லட்சத்தை பரிசு தொகையை தட்டி சென்றார். இரண்டாம் இடம் சாண்டி. மூன்றாம் இடத்தை லொஸ்லியா மற்றும் நான்காம் இடத்தை ஷெரின் பிடித்தார்.
இந்நிலையில், ஷெரின் தனது வாழ்க்கை குறித்து கூறியுள்ளார். சிறு வயதில் இருந்தே ஏராளமான கஷ்டங்களை அனுபவித்து வந்துள்ளார். ஷெரினுக்கு மூன்று வயதாக இருக்கும் போதே அவரது தந்தை பெண் குழந்தை என்பதால் விட்டுவிட்டு சென்றுள்ளார்.
தந்தை இல்லாத கஷ்டமே தெரியாத அளவிற்கு ஷெரினின் தாயார் அவரை வளர்த்து வந்துள்ளார். தனது தந்தையை பற்றிய ஞாபகமே இல்லாமல் இருந்த ஷெரின் பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்டி மற்றும் சேரனை கண்டதும் தனது தந்தையின் ஞாபகம் வந்துள்ளது, மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பல மாற்றங்கள் ஏற்பட்டு, மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
English Summary
bigg boss sherin says life story