எல்லாம் பணம்... என்னை யார் என்று நினைத்தீர்கள்.. கொந்தளிப்பில் மீராமீதுன்.!! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை மீராமீதுன். இவர் பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும்., பிக் பாஸ் இல்லத்தில் நடைபெற்ற சேரன் - மீராமீதுன் தொடர்பான பிரச்சனை பெரும் அளவில் இவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில்., தற்போது நடிகை மீராமீதுன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில்., கடந்த 40 நாட்களாக நான் இங்கு இல்லை என்பதால்., பல அவதூறான விஷயங்கள் சமூக வலைத்தளத்தில் உலாவி வருகிறது. காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்திருக்கும் பட்சத்தில்., நான் பிற மாநிலத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. 

எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற பட்சத்தில் நான் அடுத்த மாநிலத்திற்கு செல்லவும் தயாராக உள்ளேன். நான் அவ்வாறு சென்றால் தமிழகத்திற்கு அசிங்கம் என்பதால்., நான் இதனை செய்யவிலை. மேலும்., எனக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. என் மீது பதிவு செய்யப்பட்ட முதல் இரண்டு அறிக்கையும் பொய்யானது. தகுந்த விசாரணை மேற்கொள்ளாமல் அனைத்தையும் பதிவு செய்கின்றனர். 

meeramithun, மீரா மிதுன்,

பணம் வாங்கிக்கொண்டு என் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.. நானும் பணம் கொடுத்தால் வாங்கி கொண்டு வழக்குப்பதிவு செய்வார்களா என்ன?.. பலர் என்னை பயன்படுத்திக்கொண்டு., தற்போது முறையான பதிலை அளிக்க மறுக்கிறார்கள். சேரன் விவகாரத்தில் நான் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்து நிகழ்ச்சியை நிறுத்திவிடுவேன்.. இவ்வாறு செய்தால் தான் எனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். 

நிகழ்ச்சி முறையாக நடத்திக்கொண்டு வந்த தருணத்திலும்., எனக்கு கொடுக்க வேண்டியது முறையாக வரவில்லை. விஜய் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி என்னிடம் கெஞ்சியதால் குறைந்த தொகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். தற்போது வரை எனக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை. முன்பணம் கூட பெறாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். 

சேரன், மீரா மிதுன்,

35 நாட்கள் பிக் பாஸ் இல்லத்தில் இருந்ததற்கு எனக்கு ரூபாய் கூட பணம் தராமல் இருக்கின்றனர். பிக் பாஸ் இல்லத்தில் யாரிடமும் பழக எனக்கு விருப்பமில்லை. சரவணன் நல்ல மனிதர் என்பதால் அவருடன் பேசினேன். எனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி மும்பையில் தற்போது உள்ளேன். மும்பை மற்றும் கேரள., கர்நாடக காவல் துறையினர் சிறப்பாக பணியை செய்கின்றனர். இதனால் மும்பையில் குடியேறிவிட்டேன்.

எனது பதிவுகளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரியாக காட்டினார்களா? என்று எனக்கு தெரியவில்லை. என்னை சிலர் புரிந்து கொண்டு உள்ளனர்.. நான் விரைவில் அரசியலுக்கு வர உள்ளேன்.. அதிமுக கட்சியில் ஜெயலலிதா இருந்த வரையிலும் சிறப்பாக அனைத்தும் இருந்தது. தற்போது ஆணாதிக்கம் இருக்கும் தருணத்தில்., பெண் அமைச்சர்கள் பதவிக்கு வர வேண்டும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss meera mithun speech about vijay tv


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->