பிக் பாஸின் செயலால் கண்ணீர் விட்ட தர்சன்.! அதிரடி காட்டும் பிக் பாஸ்.!!
bigg boss darsan eats chilly
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 3, தற்போது 92 நாட்களை தொட்டுள்ளது.
இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், வரும் நாட்களில் டபுள் எலிமினேஷன் நடைபெறும் என்றும் கமல் நேற்று தெரிவித்தார். தற்போது பிக்பாஸ் வீட்டில், கவின், சாண்டி, ஷெரின், லெஸ்லியா, முகென், தர்ஷன் ஆகிய 6 பேர் மட்டுமே உள்ளனர்.
இந்த செய்தி குறித்த முழு வீடியோ பதிவு:
இந்நிலையில், இன்று வெளியான முதல் பிரோமோவில், தர்ஷனிடம் டைரக்ட்டாக யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று பிக்பாஸ் கேட்டார். அதற்கு தர்ஷன், ஷெரினைதான் யாரும் காப்பாற்ற மாட்டார்கள் அதனால் அவரை காப்பாற்ற விரும்புகிறேன் என கூறினார்.
ஷெரினை காப்பாற்ற வேண்டும் என்றால் ஒரு பச்சை மிளகாயை முழுவதுமாக சாப்பிட வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார். இதனை கேட்ட தர்ஷன் ஒரு பச்சை மிளகாயை எடுத்து கடித்து சாப்பிட்டுவிட்டார். காரம் தாங்க முடியாமல் தர்ஷன் இருந்தார். அப்போது நீங்கள் இன்னொருவரையும் காப்பாற்றலாம் என பிக்பாஸ் கூறினார். யாரை காப்பாற்ற போகிறீர்கள் என பிக்பாஸ் கேட்க சாண்டி அண்ணா என்று தர்ஷன் கூறினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
bigg boss darsan eats chilly