பிக்பாஸில் நிகழ்ச்சியில் மதுமிதா வாங்கிய தொகை எவ்வளவு? விஜய் டிவி தரவேண்டிய பாக்கி தொகை எவ்வளவு?
bigboss mathu meitha payment details
கடந்த ஜூன் மாதம் பிக்பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கியது 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் தொடரில் தற்கொலை முயற்ச்சி செய்ததால் நடிகை மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல்நிலையத்தில் மதுமிதா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், விஜய் டிவியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்-3 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட. நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி செய்தார். தற்கொலை முயற்சி செய்வது பிக்பாஸ் போட்டிக்குக்கு எதிரானது இதனால் 50 நாட்களிலேயே மதுமிதா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
மதுமிதா பிக்பாஸ் சீசன்-3 இருந்து வெளியே செல்லும் போது, இதுவரை அவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டதற்கான பில் மதுமிதாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி மதுமிதா, 11,50,000 தொகையை பெற்றுள்ளார். மீதமுள்ள (80,000 ரூபாய் வீதம்) 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக பிக்பாஸ் தரப்பில் கூறியதாகவும், அதை எல்லாம் ஒப்புக் கொண்டு போட்டியை விட்டு வெளியே சென்றவர்.
நேற்று முன்தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனாவின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து விடுவேன் என்றும், நீங்கள் பணம் தரும் வரை காத்திருக்க முடியாது என்று பிக்பாஸ் ஒருங்கிணைப்பாளர் டீனாவை மிரட்டி உள்ளார் என விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் அந்த புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
bigboss mathu meitha payment details