பிக்பாஸ் பிரபலத்தை அதிரடியாக கைது செய்த போலீசார்!! வசமாக சிக்கிய பிக்பாஸ் பிரபலம்!!
big boss contestant arrested
பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மக்களை தொலைக்காட்சி முன்னாடி அமரவைத்தது மறக்க முடியாது. இது தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடித்தது. இந்த நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தொடங்கியது. பிறகு கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி என பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறது.தமிழ், தெலுங்கில் இந்நிகழ்ச்சி 2 வது சீசன் முடிந்துள்ளது.
தமிழில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போல, மராத்தியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசன் தற்போது தொடங்கிய நடந்து வருகிறது, போட்டியில் கலந்துகொண்டவர்கள் ஒரே வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மராத்தி மொழியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஜித் பிசுகாலே, அவர் மீது 2015 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் செக் மோசடி வழக்கில் போலீஸ்சார் திடீரென அவரை கைது செய்யது வெளியில் கூட்டி சென்றனர்.
திடீரென சூட்டிங் நடக்கும் செட்டுக்குள் புகுந்து போலீசார் அபிஜித் பிசுகாலேவை கைது செய்தபோது. பிக்பாஸ் செட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் இது ஏதோ நாடகம் என நினைத்துக்கொண்டிருக்க, bigbossஅபிஜித் பிசுகாலே போலீசாரால் வெளியே அழைத்துச் செல்லப்பட்டது சக போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
English Summary
big boss contestant arrested