பாட்டியாக மாறிய ஆண்ட்ரியா.! ஃபர்ஸ்ட் லுக்கில் இப்படி ஒரு பின்னணியா.?! - Seithipunal
Seithipunal


2014 ல் மிஷ்கின் இயக்கத்தில் மிகவும் திகில் திரைப்படமாக பிசாசு திரைப்படம் வெளியாகியது. படத்தின் கதா நாயகனாக நாகா மற்றும் நாயகியாக பிரியங்கா மார்ட்டின் ஆகியோர் நடித்து இருந்தனர். கதா நாயகியின் தந்தையாக ராதாரவி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிந்து இருந்தார்.

இந்த படமானது திகில் படமாக அமைந்து இருந்தாலும் கூட தந்தை மகளுக்கு இடையேயான அன்பின் ஆழத்தை உணர்த்துகின்ற படமாக அமைந்து ரசிகர்களின் மத்தியில் வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 உருவாக்க உள்ளது. 

இதில், நடிகை ஆண்ட்ரியா ஒப்பந்தமாகி இருக்கின்றார். ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இத்தகைய சூழலில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உருவான கதையை நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், "இடது புறத்தில் இருப்பது என்னுடைய பாட்டி, இளம் பெண்ணாக இருந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. அவருடைய கூந்தல் மற்றும் கண்களை பார்க்கும் பொழுது அவர் இந்த இடத்தை சேர்ந்தவர் போல் எனக்கு தெரியவில்லை. இந்த படத்தின் கதையை நான் கேட்ட போது என்னுடைய பரம்பரையை தான் இந்த கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு பார்த்தேன். 

உடனடியாக பழைய புகைப்படங்களை இயக்குநருக்கு அனுப்பி இருக்கின்றேன். இயக்குநருக்கும் இந்த புகைப்படம் மிகவும் பிடித்த காரணத்தால் பாட்டியின் புகைப்படத்தை கொண்டு ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை நாங்கள் ரீ கிரியேட் செய்தோம்' என்று பதிவிட்டு இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

antriya first look back round


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->