மனம் மாறிய அஜித்குமார்.? துணிவு படத்தால் நிகழப்போகும் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 11ம் தேதியன்று நடிகர் அஜித் நடித்து வெளியான துணிவு படம் சில வாரங்கள் கடந்த பிறகும் ஹவுஸ்புல்லாக இருக்கிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றும்,வசூலில் முன்னணி இடத்தை பிடித்தும் வருகிறது. 

இந்நிலையில் தமிழ் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் துணிவை தொடர்ந்து அடுத்த திரைப்படம் அஜித் நடிக்க உள்ளதாகவும், என்று க இப்படத்தின் வேலைகள் பிப்ரவரி மாதம் ஆரம்பம் ஆக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

2011ம் ஆண்டு அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தார். அதன்பிறகு துணிவு படம் வெளியான திரையரங்கில் அடுத்தடுத்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் தனது ரசிகர்களை நெருங்கிய வட்டாரங்கள் தொடர்பில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன்மூலாக ரசிகர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய போவதாக கூறியுள்ளார். அஜித்தின் இந்த திடீர் மாற்றம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படு்த்தியுள்ளது. தனது திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்கள் உயிரிழந்த சம்பவத்தால் இந்த முடிவை எடுத்துள்ளார் என திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith May support To Fans club


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->