தல சொல்லவே வேணாம்.,நாங்களே உறுதிமொழி எடுப்போம்., பேனர் விவகாரத்தில் கெத்து காட்டிய அஜித் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் நடிக்கும் படங்களுக்கு இனி பேனர் வைக்க மாட்டோம் என்று மதுரையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் உறுதிமொழி எடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளார்கள். சென்னை சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனரால் விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் மரணம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதன் எதிரொலியாக அரசியல் கட்சித் தலைவர்கள் இனி பேனர், கட் அவுட்டுகளை அமைக்க வேண்டாம் என்று  தங்களது தொண்டர்களுக்கு அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

இந்த விவகாரத்தில் நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு பேனர் வைக்கக் கூடாது என வலியுறுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். சில நடிகர்கள் அதனை ஏற்கனவே செய்யத் தொடங்கி விட்டார்கள். இந்த நிலையில் பேனர் விவகாரம் தொடர்பாக மதுரை அஜித் ரசிகர்கள் தாமாகவே முன் வந்து தரமான முடிவு எடுத்துள்ளார்கள்.

என்னவென்றால், மதுரை வீதிகளில் அஜித் ரசிகர்கள் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், 'சுபஸ்ரீயின் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது. தவறுகள் நடப்பதற்கு முன்னாள் அதை நாம் சிந்தித்துச் செயல்படத் தவறுவதால் தான் ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்துகிறது. இனிமேலாவது சிந்தித்துச் செயல்படுவோம். 

அந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்' என கூறப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த அஜித் ரசிகர்களும், மதுரை அஜித் ரசிகர்களின் இந்த செயலை பாராட்டி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajith fan on banner issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->