மீண்டும் திரையில் சூர்யா-ஜோதிகா இணைப்பா?! ரசிகர்களுக்கு பதிலளித்த சூர்யா!!
again jyothika in film
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கான உரிமையை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் கைப்பற்றியிருப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் வருகிற மே 31ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையே நடிகர் சூர்யா ட்விட்டர் நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதில் ரசிகர்கள், மீண்டும் ஜோதிகாவுடன் நடிப்பீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு சூர்யா "அப்படி ஒரு எண்ணம் எங்களுக்கு ஏற்கனவே ஏற்பட்டு விட்டது. பொருத்தமான, சிறப்பான கதை கேட்டு வருகிறோம். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என நம்புகிறேன்" என பதிலளித்துள்ளார்.