மோடியை தொடர்ந்து ரஜினிக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட் ஆபர்.!
after prime minister modi actor rajini got jackpot offer
நேற்று சென்னையில் இருந்து பெங்களூருக்கு ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 48 பயணிகள் பயணம் செய்தனர். அந்த விமானம் புறப்பட சில மணி நேரத்திலேயே சென்னை விமான நிலையத்திற்கு திரும்ப வந்துள்ளது.
காரணம் என்னவென்று பார்த்தால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தை அவசர அவசரமாக தரை இறங்கியுள்ளனர். பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். உரிய நேரத்தில் தொழில்நுட்பக்கோளாறு கண்டறியப்பட்டதால் விமான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்த் பெங்களூர் சென்றதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியை தொடர்ந்து பேர் கிரில்ஸின் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்தும் கலந்து கொள்கிறார். இந்த படப்பிடிப்பிற்காக தான் ரஜினி காந்த் பெங்களூர் சென்றுள்ளார்.
இந்த படப்பிடிப்பானது கர்நாடகா மாநிலம் பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடக்க உள்ளது. பேர் கிரில்ஸ் இயக்கும் இந்த நிகழ்ச்சிக்காக காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். ஒரு சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி உலகளவில் ஒளிபரப்பாகும் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
English Summary
after prime minister modi actor rajini got jackpot offer