இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா.?! அதுல்யாவால் ஏற்பட்ட புதிய பஞ்சாயத்து.!  - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளங்களில் முக்கிய பிரபலங்களின் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்குவது வழக்கமான ஒன்றுதான். அந்தவகையில், தற்போது நடிகை அதுல்யா ரவியின் பெயரில் போலி முகநூல் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்து அவர் புகார் தெரிவித்து இருக்கின்றார். 

காதல் கண் கட்டுதே, நாடோடிகள் 2, அடுத்தசாட்டை, ஏமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் அதுல்யா ரவி. இவரது ஆரம்ப காலத்தில் மிகவும் அடக்கமாக நடித்தாலும் கூட போகப் போக இவர் கவர்ச்சி நடிகையாக மாறி விட்டார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா ரவி சமீபத்தில் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். 

பிரம்மாண்டமா இருக்கீங்க. கூலான போட்டோவில் ஹாட் லுக்., ரசிகர்களை  குதூகலப்படுத்திய அதுல்யா.! - Seithipunal

அதில் என்னுடைய பெயரில் போலி முகநூல் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இது மோசமான செயல். இந்த கணக்கில் இருந்து எனது நண்பர்களுக்கும் செய்திகள் அனுப்புகின்றனர். நான் பேஸ்புக்கில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். 

இந்த பக்கத்தை ரிப்போர்ட் அடியுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பேஸ்புக்கில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த முகநூல் பக்கம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

adhulya ravi fake account on Facebook


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->