இதற்காக மட்டும் தான் கதாநாயகிகளின் சம்பளம் உயர்ந்தது..! அதிரடியில் டாப்ஸி.!!
actress taapsee speech about salary increment
இந்திய திரையுலகின் தமிழ்., தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வளம் வந்த டாப்ஸி., இந்தி மொழியில் நடித்து வெளியான திரைப்படங்களும் நல்ல வசூலை செய்து குவித்தது. மூன்று மொழிகளிலும் தொடர் வெற்றியை அடுத்து., சம்பளமும் தற்போது டாப்ஸிக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது.
இந்த சம்பள உயர்வு குறித்து டாப்ஸி அளித்த பேட்டியில் தெரிவித்துவது., கடந்த சில மாதங்களாக திரைத்துறையில் கதாநாயகிக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் அவர்களுக்கு சம்பளமும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
இந்த மாற்றம் கட்டாயம் வரவேற்கப்பட வேண்டும். இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகிக்கு ரூ.20 கோடிக்கு மேலாக சம்பளம் பெரும் மாற்றத்தினையே., இதற்கு உதாரணமாகவும் கூறலாம்.
இதற்கு முன்னாள் கதாநாயகிகள் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கினாலே அனைவரும் வாயை பிளப்பார்கள். தற்போதுள்ள நிலையில் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுவதாலேயே இம்மாற்றம் ஏற்பட்டுள்ளது.
படங்கள் ரூ.100 கோடிக்கு மேலாக வசூல் செய்து வருவதும் இதற்கு காரணமாக கூறலாம். கதாநாயகரோடு ஒப்பிட்டு பார்த்தல் பெரிய வித்தியாசம் இருக்கும் நிலையில்., தமிழ் - தெலுங்கு - இந்தி திரையுலகிலும் இதே வித்தியாசம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
actress taapsee speech about salary increment