பிரியா பவானி சங்கருக்கு திருமணமாகாமல் இருப்பதற்கு இது தான் காரணமா.?! அவரே வெளியிட்ட பேட்டி.! - Seithipunal
Seithipunal


செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரை சீரியலான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன்பின் நிறைய சீரியல்களில் நடித்து வந்த ப்ரியா பவானி சங்கருக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்தது.

தொடர்ந்து இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவான மேயாதமான் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அடுத்ததாக இவரது நடிப்பில் நிறைய படங்கள் உருவாகி வருகின்றன. தற்போது பிரியா பவானி சங்கர் கைவசம் யானை, குருதி ஆட்டம், அகிலன், பொம்மை, திருச்சிற்றம்பலம், ருத்ரன் உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. இவர் ராஜவேல் என்ற நபரை காதலித்து வருகின்றார். 

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதல் குறித்து ஓபனாக பேசியுள்ளார். அதில், "கல்லூரி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. ஆனால், எனக்கு செய்தியாளர், சீரியல் மற்றும் படவாய்ப்புகள் அடுத்தடுத்து தானாகவே கிடைத்ததைத் தொடர்ந்து அடுத்த படம், அடுத்தபடம் என்று திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Priya bavani about her marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->