ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருந்த போதே மைதானத்தில் நடிகை அரங்கேற்றிய அட்டகாசம் - எழுந்த இரசிகருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
actress prasanthi activity during ipl match
ஐபிஎல் தொடரின் 12ஆவது சீசனில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதின.
ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகை பிரஷாந்தி ரசிகர் ஒருவரை ஆட்டத்தைக் காண விடாமல் அட்டகாசம் செய்துள்ளார்.
தட்டிக்கேட்ட அந்த ரசிகரை தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமல்லாமல், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
ஆட்டம் முடிந்தவுடன் பாதிக்கப்பட்ட ரசிகர் ஹைதராபாத் நகர காவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை நடிகை பிரஷாந்தி மற்றும் அவருடன் இணைந்து அட்டகாசம் செய்த 5 பேர் மீது 341, 188 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
actress prasanthi activity during ipl match