நம்பவைத்து துரோகம் செய்துவிட்டார் அவர்... பிரபல நடிகை பகீர்.. ஷாக்கான திரையுலகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்த்திரையுலகில் சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு போன்ற திரைப் படங்களில் நடித்திருப்பவர் மீரா வாசுதேவன். 

இவர் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அறிமுகமாகிய நிலையில், இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இருப்பினும் இவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் தோல்வியை தழுவியது. 

மேலும், இதனை போன்று மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கையும் தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்று தெரியவருகிறது. 2 முறை திருமணம் செய்து கொண்டும், இரண்டும் விவகாரத்திலேயே முடிந்துள்ளது. 

இந்நிலையில், திரைத்துறையில் இவரது மேனேஜரால் ஏமாற்றப்பட்டு விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியிருப்பதாவது, மலையாளத்தில் நான் மோகன்லாலுடன் நடித்த படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து இருந்தது. 

ஆனால் அப்போது மொழி பிரச்சனையாக இருந்தால், மேனேஜரை என்னுடன் வைத்துக் கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு அதுதான். அவர் என்னை சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். 

மேனேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்து விட்டேன். ஆனால் எல்லா படங்களும் தொடர்ந்து தோல்வியையே தழுவியது. பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பியது, மேனேஜர் தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில் நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே எனக்கு தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress meera vasudevan speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->