இந்த காதலாவது கல்யாணத்தில் முடியனுமே..! ஏக்கத்தில் நடிகை செய்யும் காரியம்.!
actress going all temple for love
சினி உலக பிரபலங்கள் என்றாலே தங்களுடைய வாழ்வில் பல காதல்கள், மோதல்கள் என்பது மிகவும் சகஜமான விஷயம் தான். இப்படி காதல் தோல்வியை பலமுறை சந்தித்த நாயகி ஒருவர் தன்னுடைய திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று கோவில் கோவிலாக சுற்றி திரிகின்றார்.
சொல்லிக்கொள்ளும்படி தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையை நிரூபித்துக் காட்டிய இந்த நடிகை சினிமா வாழ்க்கையில் கிடைத்த வெற்றியை தன்னுடைய நிஜ வாழ்க்கையில் பெற முடியாமல் தவித்து வருகின்றார். திருமணம் வறை செல்லும் காதல் இறுதி நேரத்தில் கழண்டு கொள்ளும்.
இப்படி இருக்க சில காலங்களாகவே பிரபலம் ஒருவருடன் ஆத்மார்த்தமான காதலில் ஈடுபட்டு வரும் இந்த நடிகைக்கு பழைய காதல்களை போல இந்த காதலும் ஆகி விடுமோ என்ற பயம் தோன்றுகிறது.
இதன் காரணமாக பல நாடுகளுக்கு சுற்றி வந்த அந்த காதல் பறவைகள், தற்போது ஜோடி, ஜோடியாக பல கோயில்களுக்கு சென்று திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று இறைவனை தரிசித்து வருகின்றதாம். நாமும் அவர்களை வாழ்த்துவோமாக..!
English Summary
actress going all temple for love