கணவரின் பிறந்தநாளை மது விருந்துடன் கொண்டாடிய நடிகை.. ஊரடங்கை மீறியதாக தூக்கிய காவல்துறை.!!
actress Funke Akindele celebrate husband birthday police registered complaint
ஆப்ரிக்க நாட்டில் உள்ள நைஜீரியாவில் கரோனா வைரஸின் தாக்கமானது அதிகரிக்க துவங்கியுள்ளது. அந்நாட்டின் தலைநகராக இருக்கும் லாகோஸில் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் லாகோஸ் நகரில் ஊரடங்கு அமலில் இருக்கிறது.
இதனால் மக்கள் வெளியே வருவதற்கும், திருமணம் மற்றும் இறுதி சடங்கு போன்றவற்றில் கலந்துகொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், அந்நாட்டின் பிரபல நடிகையாக இருந்து வரும் பன்கே அகிண்டேலே (Funke Akindele) தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்துள்ளார்.
இவரின் திட்டப்படி, தனது குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களை இல்லத்திற்கு வரவழைத்து ஆடல் பாடல் மற்றும் மது விருந்து என நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்தி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் தனது இல்லத்திலேயே தங்கியிருப்பதாகவும், யாரும் வெளியே செல்லவில்லை என்று தன் பக்கம் நியாயம் உள்ளது போல தெரிவித்த நிலையில், ஊரடங்கை மீறி செயல்பட்டதால் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இவருக்கு 260 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.20 ஆயிரம்) அபராதமும் விதித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
actress Funke Akindele celebrate husband birthday police registered complaint