வெளியானது சித்ராவின் பிரேத பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கை.! எதிர்பாராத தகவல்களை வெளியிட்ட போலீசார்.!
actress chithra post modem report
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கையின் படி சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்த நிலையில், தற்போது உடற்கூறு ஆர்வின் முதல்கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது. ஒண்ணரை மணி நேரம் நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வின் பரிசோதனையில் மருத்துவர்களின் முதல்கட்ட அறிக்கையில், சித்ராவின் மரணம் தற்கொலை தான் உறுதியாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கொலையாக இருக்குமோ என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், தூக்கிட்டதால் அவரது எலும்பு உடைந்துள்ளது என்பது கண்டறிப்பட்டு இது தற்கொலை தான் என்பது உறுதியாகியுள்ளது.
தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும், தற்கொலைக்கு தூண்டியது யார் என்பதும், எத்தனை மணிக்கு அவர் உயிர் இழந்தார் என்பதும் அடுத்தகட்ட அறிக்கைகளில் தெரியவரும். சித்ராவின் உடலில் இருந்த காயங்கள் தூக்கு மாட்டும் பொழுது அவரது நகக்கீறலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
English Summary
actress chithra post modem report