நடிகர் சங்க தேர்தல் விஷாலுக்கு கவலையளிக்கும் விதமாக வந்த அறிவிப்பு!! சோகத்தில் பாண்டவர் அணியினர்!!
actress chamber election cancel
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகின்ற 23ம் தேதி, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான ‘பாண்டவர்’ அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான ‘சுவாமி சங்கர்தாஸ்’ அணியும் போட்டியிடுகின்றனர்.
எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதியிக்க கோரி நடிகர் விஷால் சென்னை உயர் நீதீமன்றதில் வழக்கு தொடர்ந்து இருந்தார், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது , பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வேறு இடத்தை இன்று தெரிவிக்க நடிகர் சங்கத்துக்கு நீதிபதிகள் உத்தரவுயிட்டிருந்த நிலையில் .
நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக பாண்டவர் அணியின் விஷால், கருணாஸ், பூச்சிமுருகன் ஆகியோர் கிண்டியில் ராஜ்பவனில் ஆளுநருடன் திடீர் சந்திப்பு சந்திப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தநிலையில் , நடிகர் சங்க பதிவாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் வாக்களர் பட்டியலில் குளறுபடி என எழுந்த புகாரை அடுத்து நடிகர் சங்க பதிவாளர் ஏற்கனவே விளக்கம் கேட்டுருந்தார் மொத்தம் 61 உறுப்பினர்கள் நீக்கப்பட்டிருப்பதாக புகார் வந்த நிலையில் இதனையடுத்து நடிகர் சங்க தேர்தலை நிறுத்த நடிகர் சங்க பதிவாளர் உத்தரவுயிட்டுள்ளார்.
English Summary
actress chamber election cancel