இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. இதுபோல பிகில் படப்பிடிப்பிலும் நடந்தது.. உண்மையை போட்டு உடைத்த பிகில் பட நடிகை.!
actress amritha about bigil shooting accident
இந்தியன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ஈவிபி சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த படப்பிடிப்பூக்கள் செட் அமைக்கும் பனியின் போது, கிரேன் அறுந்து விழுந்ததில் 3 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.
இந்த விபத்திற்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிகில் படத்தில் தென்றல் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அம்ரிதா ஐயர் தனது ட்வீட்டர் பக்கத்தில் "இது மிகவும் வருத்தத்தை தருகிறது, இதை போன்ற ஒரு சம்பவம் பிகில் படத்தின் படப்பிடிப்பிலும் நடந்துள்ளது. ஆம் இதை போலவே பிகில் படப்பிடிப்பின் போது ஒரு நபரின் மீது லைட் தவறி விழுந்தது என பதிவு செய்துள்ளார்.
English Summary
actress amritha about bigil shooting accident