ரஜினி அவரது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறார் - நடிகர் விவேக் அதிரடி.!!
actor vivek speech about rajinikanth political activities
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கோவில்பட்டியை அடுத்துள்ள குருமலையில் பதினெட்டாம் படி கருப்பசாமி கோவிலானது அமைத்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் அலங்கார ஈஸ்வரி தாயாரின் கோவிலில் புதிய மண்டபங்கள் கட்டப்பட்டது.
இந்த மண்டபத்தை திறப்பதற்காக நடிகர் விவேக் அழைக்கப்பட்டு., அதன் படி நடிகர் விவேக் இன்று மண்டபத்தை திறந்து வைத்து சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு அடுத்த படியாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது., பாராளுமன்ற தேர்தலுக்கு எத்தனை கூட்டணிகள் மற்றும் மெகா கூட்டணிகள் அமையப்பெற்றாலும்., மக்கள் என்ற மகா சக்தியை முன்னிறுத்தியே கூட்டணியை வைத்துள்ளனர்.
பொதுமக்களின் சக்தியால் தான் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தீர்மானம் செய்ய முடியும். இந்திய ஜனநாயக நாட்டில் யாரும் யாருடனும் போட்டியிடலாம்., கூட்டணி அமைக்கலாம்., முடிவானது மக்கள் கையில் இருக்கிறது.
ரஜினி அவர் கூறியதில் இருந்து பின்வாங்கவில்லை., சட்டமன்ற தேர்தல் நிற்பேன் என்று கூறியிருந்தார்., அந்த விஷயத்தில் அவர் தெளிவாக இருக்கிறார். வரும் தேர்தலின் முடிவானது மிகவும் சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும். அனைவரையும் போன்றே நானும் மக்களை போல முடிவை எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.
English Summary
actor vivek speech about rajinikanth political activities