சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட ஜோதிகா பேச்சு விவகாரத்தில், விளக்கம் அளித்த சூர்யா.!!
Actor surya explain about jodhika speech
நடிகர் சூர்யாவின் மனைவியான நடிகை ஜோதிகா தஞ்சையில் இராஜராஜ சோழன் பெரிய கோயிலை கட்டியுள்ளார். அது பிரம்மாண்டமாக இருக்கிறது. கோவில்களில் மக்கள் அதிகளவு பணத்தை குவித்து வருகின்றனர். இது போன்று பள்ளி கல்லூரி மற்றும் மருத்துவமனைகளை அதிகளவில் கட்டித் தரவேண்டும் என்று பேசியிருந்தார். இந்த வீடியோ பழைய வீடியோவாக இருந்தாலும், இது தொடர்பான வீடியோ காட்சியானது சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியது.
இந்த நிலையில், இது தொடர்பாக சூர்யா விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுவதில்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதி அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும் சமூக ஊடகங்களில் விவாதமாக மாறியிருக்கிறது.
கோவில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தியதை சிலர் குற்றமாகப் பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்தில் உள்ள வாக்கு. நல்ல சிந்தனைகளை காது கொடுத்து கேட்காத நபர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.
பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கரோனா காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த ஆதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. அறிஞர்கள், ஆன்மிகப் பெரியவர்கள் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய அந்த கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மதங்களை கடந்து மனிதம் முக்கியம் என்பதை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள் நண்பர்கள் ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகம் அறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதிலளிக்கிறார்கள். நல்ல எண்ணங்களை விதைத்து, நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்க செய்கிறார்கள்... எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார்..
Tamil online news Today News in Tamil
English Summary
Actor surya explain about jodhika speech