மேடையிலேயே கதறி அழுத்த நடிகர் சூர்யா..! அனைவரையும் பதறவைத்த வீடியோ.!  - Seithipunal
Seithipunal


டிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர். இவரது தந்தை நடிகர் சிவகுமார் போலவே இவரும் அனைவரிடத்திலும் நல்ல விதமாக பழகக்கூடியவர், நல்ல பழக்கவழக்கங்களையும் கொண்டவர். நடிகர் சூர்யா திரைப்படத்தில் நடிப்பதையும் தாண்டி, ஏழை சிறுவர்களுக்கும் கல்வி கற்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கும் அகரம் அறக்கட்டளை மூலமாக, தேடி கண்டறிந்த உதவி செய்து வருகிறார்.

மேலும் சமூகத்தொண்டு தொண்டுகளை ஆற்றுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டுபவர் நடிகர் சூர்யா. இந்த நிலையில் அகரம் அறக்கட்டளை சார்பில் நேற்று இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டது. இந்த விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் அகரம் அறக்கட்டளை நிறுவனர் சூர்யா மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

இப்புத்தகத்தை வெளியீடும் விழாவில், அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்று வரும் ஏழை மாணவி ஒருவர் மேடையில் பேசினார். அப்போது அவருடைய வாழ்க்கையில் சந்தித்த பல மோசமான கஷ்டங்களையும், சோகமான சம்பவங்களையும் அவரது குடும்ப சூழ்நிலைகளையும் அவரது தாய் பற்றியும் மிகவும் மனதை உருக்கும் அளவிற்கு அவர் பேசியிருந்தார்.

அந்த மாணவி பேசுவதை கேட்ட சூர்யா, மேடையிலேயே கண் கலங்கினார். பின்னர் அந்த மாணவியை தட்டிக்கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். இதை பார்த்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சூர்யா படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் உண்மையான ஹீரோ என்று சொன்னால் அது மிகையாகாது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor surya emotion on agaram foundation student speech


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->