நள்ளிரவில் எஸ்.ஜே.சூரியாவுக்கு கால் செய்த தளபதி.! என்ன கூறினார் தெரியுமா.!?
actor sj surya speech about vijay
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் 65ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், நடிகர் எஸ் ஜே சூர்யா விஜய் குறித்து ஒரு சுவாரசியமான தகவலை வெளியிட்டு இருக்கின்றார்.
அதில் ஸ்பைடர்மேன் படப்பிடிப்பில் இருக்கும் பொழுது இரவு 11 மணிக்கு விஜய் பேசுவதாக ஒரு போன் கால் வந்தது விஜய் நம்பர் என்னிடம் ஏற்கனவே இருந்தது. ஆனால், இது புது நம்பர் என்பதால் நான் நம்பவில்லை.
பின்னர், தொடர்ந்து பேசிய விஜய் நெஞ்சம் மறப்பதில்லை டிரைலர் பார்த்தேன் ஒரு மனிதன் எவ்வளவு கஷ்டப்படுவார் என்பதை நீங்கள் பேசுகின்ற வசனம் கேட்டு வீட்டில் விழுந்து விழுந்து சிரித்தேன் என்று கூறினார். விஜய் எனக்கு மிகப்பெரிய ரசிகர் என்று கூறினார். அது எனக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
actor sj surya speech about vijay