சுஷாந்த் மரணம்: மருத்துவர்களின் உள்ளுறுப்பு ஆய்வு ரிப்போர்ட், என்ன சொல்கிறது தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சுஷாந்தின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் அவருடைய பிரேத பரிசோதனையில் மருத்துவர்கள் இந்த மரணம் தற்கொலை தான் என்று தெரிவித்துள்ளனர். 

காவல்துறையினர் இதுகுறித்து சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். எனவே, அவருடைய உள் உறுப்புகளை மருத்துவ ஆய்விற்காக போலீசார் அனுப்பி வைத்தனர். 

மும்பையில் இருக்கும் ஜேஜே மருத்துவமனை இந்த ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவில் சந்தேகப்படும் படியான எந்த விஷயமும் அவருடைய உறுப்புகளை தாக்கவில்லை என்று மருத்துவர்கள் திட்டவட்டமாக அறிக்கையை வெளியிட்டுள்ளனர். 

மிக நெருங்கிய நண்பர் வட்டாரத்தில் 27 பேரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி அவர்களுடைய வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இது சந்தேகத்திற்கு இடமின்றி தற்கொலைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor shushaanth death investigation report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->