முருகனின் அறுபடை வீடும் ஆறு பெயர்களில் உள்ளது.! கரகாட்டக்காரன் 2 திரைப்படத்திற்கு ராமராஜனின் காட்டமான பதில்.!!
actor ramarajan speech about karakattakaran 2 movie
இயக்குனர் கங்கை அமரனின் இயக்கத்தில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னதாக வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கரகாட்டக்காரன். இந்த திரைப்படமானது மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து., கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக வெற்றி கொண்டாட்டமானது நடைபெற்றது.
இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் கலந்து கொண்ட நிலையில்., கரகாட்டக்காரன் திரைபடத்தில் ராமராஜன்., கனகா., கவுண்டமணி., செந்தில் என நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தாலும்., அந்த திரைப்படத்தின் காமெடிக்கு நல்ல வெற்றியை பெற்றது.
இந்த நிலையில்., இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கங்கை அமரன் அறிவித்துள்ள நிலையில்., இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த படத்தின் கதாநாயகன் ராமராஜன் அதிர்ச்சிகரமான விஷயத்தை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்தாவது., கரகாட்டக்காரன் இரண்டாம் பாகம் குறித்து கங்கை அமரன் என்னிடம் பேசினார். இந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சில விஷயங்களை மீண்டும் திரும்பி பார்க்கக்கூடாது. அது சரியாக இருக்காது.
கரகாட்டக்காரனை போல கரகாட்டக்காரன் 2 நல்ல வெற்றியை பெரும் என்றாலும் நான் நடிப்பதற்கு விருப்பமில்லை. பொதுவாக முதல் பாகம் மட்டுமே நல்லது. இரண்டாம் பக்கத்தில் எனக்கு உடன்பாடு இல்லை., தமிழ்க்கடவுள் முருகனுக்கு அறுபடை வீடுகள் இருந்தாலும்., ஒவ்வொரும் ஒவ்வொரு பெயரில் தான் உள்ளது என்று தெரிவித்தார்.
English Summary
actor ramarajan speech about karakattakaran 2 movie