பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியேறிய முன்னணி நடிகர்!
actor parthiban left from ponniyin selvan cast crew
தமிழின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் செக்கச்சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து, தற்போது 'பொன்னியின் செல்வன்' என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர் என அறிவிப்பு வெளியானது.
படப்பிடிப்பு விரைவில் தாய்லாந்தில் தொடங்கவுள்ளது என தகவல்கள் வெளியான நிலையில், இந்த படத்தில் நடிகர் பார்த்திபன் நடிக்க இருப்பதை தனது டுவிட்டர் பதிவின் மூலம் உறுதிப்படுத்தினார். ஆனால் காலம் கடக்கவே தனது 'ஒத்த செருப்பு' பட பணிகளில் தீவிரமானார். இந்த நிலையில் தான் தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்திலிருந்து பார்த்திபன் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கேட்கையில், 'ஒத்த செருப்பு' படம் வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான முதல் கட்ட பணிகளில் பார்த்திபன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் எனவும், மேலும், அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களின் படப்பிடிப்பும் இருக்கிறது. இதன் இரண்டுக்கும் இடையே 'பொன்னியின் செல்வன்' படத்துக்காக தேதிகளை ஒதுக்கி நடிக்க பார்த்திபனால் முடியாமல் போனது என தகவல்கள் கிடைத்துள்ளது.
English Summary
actor parthiban left from ponniyin selvan cast crew