நடிகர் குமாரராஜன் தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்.. உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் குமாரராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை என அவரது உறவினர்கள் விளக்கம் அளித்துள்ளனர். 

நடிகரும், தயாரிப்பாளருமான குமாரராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. சிந்தித்து சிந்தித்து என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்நிலையில்,  குமாரராஜன் நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குமாரனின் தற்கொலை சம்பவம்  திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கடந்த 2013ஆம் ஆண்டு பாலு ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த சந்தித்ததும் சித்தித்ததும் திரைப்படத்தில் குமாரராஜன் நாமக்கல் குமார் என்ற என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும்,  பாலு ஆனந்த், கஞ்சா கருப்பு, கொட்டாச்சி, நிழல்கள் ரவி, ரஷியா, ரித்திகா, சபிதா ஆனந்த், காதல் சரவணன், கிங்காங், டென்சிங், சோப்ராஜ், என்.ராஜா ஆகிய சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.

சந்தித்ததும் சித்தித்ததும் படத்தை தொடர்ந்து துப்பார்க்கு துப்பாய, ரெண்டுல ஒண்ணு ஆகிய படங்களில் நடிக  குமாரராஜன் ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், குமாரராஜன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என அவரது உறவினர்கள் விளக்கம் அளித்துள்ளனர். குமாரராஜன் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலின் உண்மை இல்லை. அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். உண்மை தெரியாமல் பேச வேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kumarajan suicide issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->