தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சோகத்தில் இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. தற்போது ஆபரண தங்கத்தின் விலை 36 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது. 

கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 34 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் மீண்டும் 36 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது.

இன்று தங்கம் சவரனிற்கு ரூ.136 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை சவரனிற்கு ரூ.136 உயர்ந்து, ரூ.36,416 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.17 உயர்ந்து, ரூ.4,552 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.48.46 ஆகவும், 10 கிராமிற்கு ரூ.484.60 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம், வெள்ளி விலைகளால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold silver price in Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->