தங்கம் விலை மீண்டும் உயர்வு.. கவலையில் இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. தற்போது ஆபரண தங்கத்தின் விலை 38 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது. 

கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 34 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் மீண்டும் 36 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு நேற்றைய விலையில் இருந்து ரூ.19 உயர்ந்து ரூ.4,551 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனிற்கு ரூ.152 உயர்ந்து, ரூ.36,408 ஆக உயர்ந்துள்ளது. இதனைப்போன்று வெள்ளி கிராமிற்கு ரூ.47.61 க்கும், 10 கிராம் 476.10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம், வெள்ளியின் விலை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold and silver Price in chennai 18 June 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->