தமிழகத்தில் டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு.!!
tasmac announcement for new restrictions
டாஸ்மாக்கில் மதுபான விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், அனைத்து மண்டல சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் டாஸ்மார்க் கடைகளில் வாடிக்கையாளர்கள் பார்க்கும்படி விலைப்பட்டியல் இருக்க வேண்டும்.
டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று மாவட்ட மேலாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதனை கடைபிடிக்காத ஊழியர்கள் மீது துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் வழக்கு ஒன்றில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் வாங்கி விற்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மது விற்பனையை மொத்தமாக செய்வது கண்டறியப்பட்டால், ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
tasmac announcement for new restrictions