இன்றைய (14.05.2019) பெட்ரோல், டீசல் விலை: தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி!!
petrol diesel price decreased
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.
இந்தநிலையில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் மக்களுக்கு தேவையயன அத்தியாவசிய பொருட்களின் விளையும் பல மடங்கு உயர்ந்து வந்தது.
இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு இருந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது குறைய தொடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
இந்தநிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 26காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.73.88 ஆகவும், அதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.61 காசுகளாகவும் உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை கடந்த ஒரு வருடமாகவே விலை உயரும்பொழுது 50 பைசா,1 ரூபாய் எனவும் குறையும்பொழுது 5 பைசா, 10 பைசா எனவும் இருக்கும். இந்த நிலையில் இன்றைய பெட்ரோல் விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
English Summary
petrol diesel price decreased