ஆற்றுக்குள் கவிழ்ந்த கார்.. ஒரே குடும்பத்தை சார்ந்த 4 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாப பலி.! - Seithipunal
Seithipunal


ஆற்றுக்குள் கவிழ்ந்த காரில் பயணம் செய்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில், திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடும்பத்தினர் 7 பேர், இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். காரில் 4 பெண்கள், 2 குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் என 7 பேர் பயணம் செய்துள்ளனர். 

இவர்கள் அங்குள்ள பாலம் அருகே சென்றுகொண்டு இருக்கும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்திற்கு கீழே உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இரவு நேரம் என்ற காரணத்தால், விபத்து குறித்து யாருக்கும் தெரியவில்லை. 

மறுநாள் காலையில், ஆற்றில் கார் அடித்து செல்லப்படுவதாக மீட்பு படையினருக்கு தகவல் தெரியவரவே, காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சேர்ந்து காரை மீட்டுள்ளனர். ஆற்றில் விழுந்த காரில் இருந்த 7 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan Islamabad Car Accident at River Family Members 7 Person Died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->