நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. தற்போது ஆபரண தங்கத்தின் விலை 36 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது. 

கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 34 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கம் மீண்டும் 36 ஆயிரத்தை தாண்டியது. ஒரு சவரனுக்கு ரூபாய் 256 உயர்ந்துள்ளது. தற்போது சவரன் ரூபாய் 36 ஆயிரத்து 064 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் 32 உயர்ந்து, சவரன் ரூபாய் 4508 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 உயா்ந்து, 53 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவுக்கு 1100 ரூபாய் உயா்ந்து, 53 ஆயிரத்து 800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may 31 gold rate in chennai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->