உச்சத்தோடு செயல்பட்டு வரும் மும்பை பங்கு சந்தை.! எவ்வுளவு தெரியுமா?.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பங்குச்சந்தை ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் பழைய பங்கு சந்தையாகும். இந்த மும்பை பங்கு சந்தையானது., மும்பையில் இருக்கும் தலால் வீதியில் அமைந்துள்ளது. கடந்த 1875 ஆம் வருடத்தின் போது துவங்கப்பட்ட மும்பை பங்கு சந்தையானது., ஆசியாவின் நான்காவது பெரிய பங்கு சந்தையாகவும்., உலகின் எட்டாவது பெரிய பங்குசந்தையாகவும் உள்ளது. 

மேலும்., இந்த மும்பை பங்கு சந்தையில் 3500 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் நிற்கற்பாடுத்தப்பட்டுள்ளது. இந்த பங்குசந்தையானது அவ்வப்போது ஏற்றத்துடன் துவங்கும்., முடியும் தருவாய் வரையிலும் ஏற்றத்துடன் பயணிக்கும். சில சமயத்தில்., பங்கு சந்தையின் துவக்கத்தில் ஏற்றதோடு இருந்தாலும்., பின்னர் வீழ்ச்சி அடையும்.. இன்னும் சில தருணத்தில்., துவக்கத்தில் வீழ்ச்சியோடு துவங்கினாலும்., பின்னர் எழுச்சி அடையும். 

share market, mumbai share market, மும்பை பங்கு சந்தை, பங்கு சந்தை,

இந்த நிலையில்., இன்று காலை துவங்கிய மும்பை பங்கு சந்தையின் வர்த்தமானது துவங்கிய சமயத்தில் இருந்தே சென்செக்ஸ் குறியீடுகள் சுமார் 250.06 புலிகள் அளவில் உயர்ந்து 38,917.39 ஆக இருந்தது. வங்கிகளுக்கான பங்குகள் அனைத்தும் லாபத்துடன் காணப்பட்டது. இதனைப்போன்றே தேசிய பங்கு சந்தை நிஃப்டியும் 69.30 புள்ளிகள் அளவிற்கு உயர்ந்து 11,543.75 புள்ளியாக இருந்தது. 

மும்பை பங்கு சந்தையில் உள்ள யெஸ் வாங்கி., ஐ.சி.ஐ.சி.ஐ. வாங்கி., ஆக்சிஸ் வாங்கி மற்றும் டாடா மோட்டார்ஸ்., எச்.டி.எப்.சி வங்கியின் பங்குகள் அனைத்தும் ஏற்ற நிலையிலேயே காணப்பட்டது. மேலும்., அமெரிக்காவின் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் காலையிலேயே 10 காசுகள் உயர்ந்து., ரூ.70.77 ஆக இருந்து துவங்கியது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mumbai share market starts high


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->