ஜப்பான்: நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.! பீதியில் மக்கள்.!!
in japan earth quake
ஜப்பான் நாட்டில் சிபா பகுதியில் இன்று காலை உள்நாட்டு நேரப்படி 7.15 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது என புவியியல் ஆய்வு மையத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிபா பகுதிகளில் உள்ள மூன்று இடங்களில் நில அதிர்வு உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளில் இருந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்