இரண்டு நாட்களுக்கு பின்னர் சொல்லி வைத்து குறைந்த பெட்ரோல் டீசல் விலை.. புலம்பும் வாகன ஓட்டிகள்.!! - Seithipunal
Seithipunal


பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைப்பில் இருந்து வருகின்றனர். மேலும், உயரும் போது வேகமாக ரூபாய் கணக்கில் உயரும் விலை, குறையும் போது பைசா கணக்கில் குறைந்து வருகிறது.

கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. பின்னர் மீண்டும் சரிவை சந்திக்க துவங்கியது. இந்த நிலையில்லாத விலையேற்றம் இந்தியாவிலும் பெருத்த தாக்கத்தை அவ்வப்போது ஏற்படுத்தி வருகிறது. 

இதனால் தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்த பெட்ரோல், டீசல் விலை, தற்போது மெல்ல மெல்ல குறைய துவங்கியுள்ளது. 

சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 5 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.74.68 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல டீசல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.27 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த சில வாரங்களாக உயர்வை சந்திக்காமல் பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. மேலும், விலை இன்னும் சற்று குறைந்து நீண்ட நாட்கள் மாறாமல் இருக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai petrol diesel price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->