GST செலுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட வரிகள் வாரியம்..!
gst amount pay duration increased
2018 - 2019 ஆம் நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டு, செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் GST R9 , GST R9C பிரிவில் கணக்கு தாக்கல் செய்ய அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
GST R9 , GST R9C பிரிவில் கணக்கு தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் காலம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது GST செலுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக இது அமைந்துள்ளது.
English Summary
gst amount pay duration increased