1300 வரை குறைந்த தங்கத்தின் விலை., இன்பவெள்ளத்தில் இல்லத்தரசிகள்! - Seithipunal
Seithipunal


கடந்த மூன்று வாரங்களாக 30000 மேல் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1300 ரூபாய் வரை குறைத்துள்ளது.

அதன்படி, இன்று சவரனுக்கு 128 ரூபாய் வரை குறைந்து 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ3,618 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.28,944ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது. 

அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,775ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30,200 விற்பனை செய்யப்பட்டது. 

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 50.80 காசுகளாகவும், கிலோ வெள்ளி ரூ.52,600 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது. 

கடந்த மூன்று மாதமாக வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதற்க்காக நான்கு காரணங்கள் உள்ளது என தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா - சீனா இடையே நடைபெற்று வரும் பொருளாதார வர்த்தக போர் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு அதிகமாகி விட்டது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் தங்கத்தின் மீதான விலை ஏற்றத்திற்கும்  ஒரு காரணம்.

இந்தியாவில் ஏற்பட்டு வரும் பொருளதார சரிவு காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.

ரியல் எஸ்டேட் அதிபர்கள் நிலம் வாங்குவதற்கு பதிலாக தங்க நகைகள் அதிக அளவில் வாங்கி குவிப்பது.

இந்த காரணங்களால் தான் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதே நிலையே  நீடித்தால் இன்னும் 3 மாதங்களில் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை எட்டி விடும் என தங்க வியாபாரிகள் தெரிவித்துள்னர்.

தங்கம் விலை 30000 வரை விலை உயர்ந்தாலும் நகை வியாபாரத்தில் பாதிப்பு இல்லை. சாதாரண, நடுத்தர மக்கள் நகை வாங்க யோசிப்பார்கள். ஆனால் விலை இறங்கவில்லை என்று தெரிந்ததும் வழக்கம் போல் நகைகளை வாங்க தொடங்கி விடுவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold rate on septem-12


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->