தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஊரடங்கு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி, வரும் 20 ஏப்ரல் 2021 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மாநிலத்தின்‌ அனைத்து பகுதிகளிலும்‌, இரவு 10.00 மணி முதல்‌ காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்‌. இரவு நேர ஊரடங்கின்‌ போது, தனியார்‌ / பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும்‌ தனியார்‌ வாகன உபயோகம்‌ அனுமதிக்கப்படாது.

மேலும், தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் அமலாகும் முழு ஊரடங்கின்போது இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் செயல்பட அனுமதி கிடையாது.

ஞாயிற்றுக்கிழமைகளில் அமலாகும் முழு ஊரடங்கின்போது, காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதியில்லை. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது, தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் உட்பட செயல்பட அனுமதிக்கப்படாது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின் போது மதுக்கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், நாளை முதல் இரவு 9 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

full lockdown tasmac close


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->